News March 12, 2025

தோல்வியடைந்த மாடலை தமிழகத்தில் புகுத்த முயற்சி: PTR

image

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், மும்மொழி என்ற தோல்வியடைந்த மாடலை புகுத்தி தமிழ்நாட்டின் கல்வித் தரத்தைக் குறைக்க சதி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 60 ஆண்டுகள் ஆனாலும் மும்மொழி கொள்கையை இங்கே அமல்படுத்த முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.

Similar News

News July 10, 2025

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

image

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

News July 10, 2025

கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

image

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.

News July 10, 2025

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!