News April 6, 2025

அதிமுகவை பிளவுபடுத்த முயற்சி: செல்லூர் ராஜூ

image

நிர்மலா சீதாராமனை 2வது முறையாக செங்கோட்டையன் சந்தித்த நிலையில், பல்வேறு கருத்துகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், இருவரின் சந்திப்பை பெரிதாக்கி, அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக சந்திப்பு நடந்ததாக இருவரும் சொல்லவில்லை. ஆனால், சிலருக்கு அதை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வரவில்லை என சாடினார்.

Similar News

News April 7, 2025

23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

image

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

News April 7, 2025

₹50 கோடி: ‘பராசக்தி’ ஒரே டீல்

image

‘பராசக்தி’ படத்தின் OTT உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். உரிமத்தை ₹50 கோடிக்கு விற்க படக்குழு பேரம் பேசியதாகவும், ஆனால், ₹45 கோடிக்கு வாங்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சொன்ன ரேட்டில் இருந்து படக்குழு பின்வாங்காத நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறதாம். 2026 பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ளது.

News April 7, 2025

மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்?… பெண் பரிதாப பலி

image

கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை ஹாஸ்பிடலில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர், சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்புக்கு சிராஜுதினே காரணம் என அவரது பெற்றோர் புகாரளித்துள்ளனர். போலீஸ் விசாரித்து வருகிறது.

error: Content is protected !!