News October 6, 2025
BREAKING: தலைமை நீதிபதி BR கவாய் மீது செருப்பு வீச முயற்சி

உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் காலணியை வீச முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுக்க முடியாது என்று கூக்குரலிட்டபடி CJI-ஐ தாக்க முயற்சித்த அவரை, அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதனால் எந்த பதற்றமும் அடையாத தலைமை நீதிபதி, இதுபோன்ற நிகழ்வுகள் என்னை பாதிக்காது என கூறிவிட்டு தனது பணியை தொடர்ந்தார்.
Similar News
News October 6, 2025
இரட்டை தலை பாம்பு பார்த்து இருக்கீங்களா?

இரட்டை தலை பாம்பு, இயற்கையில் மிகவும் அபூர்வமாகக் காணப்படுகிறது. மரபியல் கோளாறு காரணமாக, பிறக்கும்போது பாம்புகளுக்கு இரட்டை தலை இருக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவரை, புராணங்களில் மட்டும் கேள்விப்பட்ட இரட்டை தலை பாம்பின் போட்டோக்கள் SM-யில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. மேலே உள்ள போட்டோஸை பாருங்க. நீங்க நேரில் பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
இதற்காக தான் நோபல் பரிசு

2025ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேரி பிரங்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சககுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் பாதுகாப்பு அம்சங்கள், T-செல்கள் பற்றிய ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ இம்யூன் நோய், கேன்சர் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும், ஸ்டெம் செல் மாற்றத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் இவர்களின் ஆய்வு உதவும்.
News October 6, 2025
BREAKING: பள்ளி திறந்த முதல்நாளே முக்கிய அறிவிப்பு

<<17901745>>RTE<<>> சட்டத்தின்கீழ் பயன்பெற பள்ளி மாணவர்கள் இன்று(அக்.6) முதல் விண்ணப்பிக்கலாம் என TN அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய அறிவிப்பின்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்றும், பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. RTE நிதியை விடுவிக்க மத்திய அரசு தாமதம் செய்த நிலையில், பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SHARE IT