News March 22, 2025
தொழுகை செய்தவர்கள் மீது தாக்குதல்: 44 பேர் பலி

நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
Similar News
News July 9, 2025
BREAKING: நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகை அருணா வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தி வருவதாகவும், நடிகை அருணாவின் கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அருணா, இயக்குநர் பாரதிராஜாவின் ’கல்லுக்குள் ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
News July 9, 2025
கோயில் பணத்தில் கல்லூரிகள்? இபிஎஸ் பேச்சுக்கு விளக்கம்

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா என்றே இபிஎஸ் பேசியதாக ADMK IT Wing விளக்கமளித்துள்ளது.
News July 9, 2025
புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.