News March 22, 2025
தொழுகை செய்தவர்கள் மீது தாக்குதல்: 44 பேர் பலி

நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
Similar News
News March 23, 2025
‘மகாத்மா காந்தியின் சீடர்’ கிருஷ்ண பாரதி காலமானார்

காந்தீயக் கொள்கையின் தீவிரப் பற்றாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிருஷ்ண பாரதி (92) இன்று காலமானார். மகாத்மா காந்தியின் சீடராக தன் சமூகப் பணிகளை தொடங்கிய இவர், அடித்தட்டு மக்களுக்கு, குறிப்பாக தலித் மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். இவரின் பெற்றோரும் சுதந்தரப் போராட்ட வீரர்கள் தான். பிரதமர் மோடி ஆந்திரா சென்றபோது, இவரிடம் ஆசி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்!
News March 23, 2025
Ration cardல் மொபைல் எண் மாற்றனுமா? இத பண்ணுங்க

ரேஷன் கார்டு என்பது ஒரு குடும்பத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. அதில் மொபைல் எண் இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த தகவல். இதனை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. நீங்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
News March 23, 2025
ரோஹித் சர்மா டக் அவுட்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். கலீல் அகமது வீசிய பந்தில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பியுள்ளார்.