News March 24, 2025
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பாஜக கண்டனம்!

துப்புரவுத் தொழிலாளர்கள் எனக் கூறிக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என கூறியதற்காக அவர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த வன்முறை கண்டனத்துக்குரியது என விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் சாடியுள்ளார்.
Similar News
News March 26, 2025
அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு: SC கடும் அதிருப்தி

பெண்ணின் மார்பகத்தை பிடித்தாலோ, ஆடையை கிழித்தாலோ ‘ரேப்பாக’ கருத முடியாது என அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. குற்றத்தின் தீவிரத்தை உணராமல் நீதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்வது வேதனை தருகிறது. உ.பி, மத்திய அரசுகள் உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News March 26, 2025
காவல், தீயணைப்பு நிலையங்கள்: CM பதில்

TNல் புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில், எம்எல்ஏக்கள் பலர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிதாக காவல், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறினார்.
News March 26, 2025
மியாமி ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்

மியாமி ஓபன் ஆண்கள் ஒற்றைய பிரிவு சுற்றில் நட்சத்திர வீரரான செர்பியாவின் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை எதிர்கொண்டார். தனது அனுபவத்தின் காரணமாக தொடக்கம் முதலே அதிரடி காட்டினார் ஜோகோவிச். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.