News May 10, 2024
செல்வம் தரும் ‘அட்சயபுரீஸ்வரர் கோயில்’

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளங்குளத்தில் உள்ளது ‘அட்சயபுரீஸ்வரர் கோயில்’. அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். இங்கு வந்து ஈசனை வணங்க, எல்லா நன்மைகளும் வளரும் என்பது நம்பிக்கை. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில் இதுவாகும். எத்தனை சம்பாதித்தாலும் சேர்க்க முடியவில்லை என்று வருந்துபவர்கள், இங்கு வழிபட்டால் செலவுகள் குறைந்து சேமிக்கும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
Similar News
News September 24, 2025
சிவாஜி கணேசன் பொன்மொழிகள்

*வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் விளைவு
*கலை என்பது மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி
*மக்களின் கைதட்டல்கள்தான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது
*வாழ்க்கை ஒரு நாடகம், அதில் நாம் அனைவரும் நடிகர்கள்
*ஒரு நடிகன் என்பவன், சமூகத்தில் நடப்பவற்றை அவனுடைய நடிப்பின் மூலம் பிரதிபலிப்பவன்
News September 24, 2025
வெட்கத்தில் சிவந்த ஷில்பா மஞ்சுநாத் PHOTOS

எமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் மூலம் பிரபலமானார். இவருக்கு ‘கண்ணம்மா’ என்ற பாடல் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது. இவர், தனது க்யூட்டான போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வெட்கத்தில் சிவந்த ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஒரு லைக் போடுங்க.
News September 24, 2025
சருமத்தை பராமரிக்க இந்த 3 மட்டும் போதும்!

நம் உடலில் உள்ள தோலைவிட, முகத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானதாக இருக்கும். சரும பராமரிப்பு பொருள்களை அதிகம் பயன்படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சருமம் பராமரிக்க இந்த 3 விஷயங்களை செய்தால் போதும். அதவாது, * மென்மையான கிலென்சர் (முகத்தை சுத்தப்படுத்த உதவும்), *மாய்ஸ்டரைசர் (முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்), *சன்ஸ்கிரீன் (குறைந்தபட்சம் எஸ்பிஎஃப் 30 சன்ஸ்கிரீன் போதுமானது).