News November 24, 2024

இரவில் இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், காரைக்காலிலும் இரவு 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

Similar News

News December 6, 2025

புயல் மீண்டும் உருவாகிறது.. கனமழை பொளந்து கட்டும்

image

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. இந்நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், டிச.15-ம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 6, 2025

பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

image

தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ONGC தளவாடங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

News December 6, 2025

கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், CM ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, CM ஸ்டாலின் அணைத்துள்ளதாக அவர் கூறினார். கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!