News November 24, 2024

இரவில் இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், காரைக்காலிலும் இரவு 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

Similar News

News December 3, 2025

ஆவின் விவகாரத்தில் திமுக நாடகம்: அன்புமணி

image

தமிழக அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையை 5-வது முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜிஎஸ்டி வரிகுறைப்பை நடை முறைப்படுத்த தவறிய திமுக மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுபடுத்த தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய திமுக, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சாடியுள்ளார்.

News December 3, 2025

நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பொழியும்

image

நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?

News December 3, 2025

நாளை காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!