News November 24, 2024
இரவில் இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், காரைக்காலிலும் இரவு 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.
Similar News
News November 25, 2025
உலகை அச்சுறுத்தும் டாப் 10 எரிமலைகள்!

எரிமலையின் சீற்றத்தை இந்தியா பெரிதாக கண்டதில்லை. ஆனால், உலகளவில் பல எரிமலைகள் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகின்றன. அப்படி உலகை அதிரவைத்து கொண்டிருக்கும் டாப் 10 பயங்கரமான, மிகவும் ஆக்டிவான எரிமலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்து அவற்றை பாருங்க. உங்களை மிகவும் பயமுறுத்திய இயற்கை சீற்றம் எது?
News November 25, 2025
2026 தேர்தலுக்கு மெகா பிளான் போடும் EPS

சட்டமன்ற தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களை பரிந்துரை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு <<18382869>>EPS அறிவுறுத்தியுள்ளதாக<<>> தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய அறிவுறுத்தல்களை EPS வழங்கியுள்ளார். அதேபோல், ஜனவரிக்குள் மெகா கூட்டணி அமைக்க மாபெரும் திட்டம் இருப்பதாகவும் நிர்வாகிகளுக்கு EPS உறுதி அளித்துள்ளார்.
News November 25, 2025
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு

இந்திய அரசியலமைப்பின் 76-வது ஆண்டு தினத்தை, நாளை (நவ.26) சிறப்பாக கொண்டாட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் CM ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காலை 11 மணிக்கு அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசியலமைப்பு நெறிமுறைகளை பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி வினா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யும்படியும் குறிப்பிட்டார்.


