News November 24, 2024

இரவில் இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், காரைக்காலிலும் இரவு 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

Similar News

News November 15, 2025

பணம் கையில் நிற்க வேண்டுமா? இதை பண்ணுங்க…

image

இந்திய நடுத்தர வர்க்கம் அதிகம் சம்பாதித்தாலும் ஏன் எப்போதும் பணப் பற்றாக்குறையிலேயே இருக்கிறது என்று தெரியுமா? நாம் தெரிந்தோ, தெரியாமலோ பழகிய சில நிதி பழக்க வழக்கங்களே அதற்கு காரணம். உங்கள் நிதி கட்டுப்பாட்டை அதிகரித்து, உங்கள் பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை மேலே SWIPE பண்ணி பாருங்க…

News November 15, 2025

தள்ளுவண்டி உணவகங்களுக்கு உரிமம் கட்டாயம்

image

பானிபூரி, சமோசா, சிக்கன் பகோடா விற்கும் தள்ளுவண்டி உணவகங்களுக்கு உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைனிலும், இ-சேவை மையங்களிலும் விற்பனை உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அது இலவசம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்கு உரிமம் இல்லாவிட்டாலும், விதிகளின்படி உணவு விற்கப்படாவிட்டாலும் அபாரதம் விதிக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

News November 15, 2025

‘அம்மா நான் சாகப் போறேன்.. நீங்க சந்தோஷமா இருங்க’

image

‘அண்ணா இப்போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா, நன்றாக படி. நான் இந்த வாழ்வில் சோர்வடைந்துவிட்டேன். அம்மா, நான் போகிறேன். அம்மா, அப்பா சந்தோஷமாய் இருங்க’. குஜராத்தில் தற்கொலை செய்துகொண்ட 6-ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடைசி வரிகள் இவை. வீட்டில் தூக்கிட்ட மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது பெரும் சோகம். சிறுமியின் இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.

error: Content is protected !!