News January 21, 2026
Assembly: மறைந்தவர்களுக்கு இரங்கல் வாசிப்பு

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 2025-ல் உயிரிழந்த முன்னாள் MLA-க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் , MLA பொன்னுசாமி, மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அப்பாவு, இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
Similar News
News February 6, 2026
காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு அங்கம்: செபாஸ் ஷெரீப்

காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணையாக இருக்கும் என பாக்., PM செபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஒற்றுமை தினத்தையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீர்(PoK) சட்டமன்றத்தில் பேசிய அவர், காஷ்மீர் பாகிஸ்தானின் ஒர் அங்கமாக மாறும் என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் பாகிஸ்தானின் ‘கழுத்து நரம்பு’ என்று பாக்., நிறுவனர் முகமது அலி ஜின்னா கூறியதே, தங்கள் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை எனவும் குறிப்பிட்டார்.
News February 6, 2026
அதிமுகவுடன் கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

தேர்தல் நெருங்குவதையொட்டி, சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் (ம) தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தனப் பிரியா பசுபதி பாண்டியன் இன்று EPS-ஐ சந்தித்தார். அப்போது, அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.
News February 6, 2026
திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது: அன்புமணி

தொழில் முதலீடுகளை பொறுத்தவரை திமுக அரசு தொடக்கம் முதலே பொய் மூட்டைகளை மட்டுமே அவிழ்த்துவிட்டு வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கையெழுத்தான தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில், வெறும் 8.20% மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன என்றும், ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்து விட்டதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டதாகவும் சாடியுள்ளார்.


