News April 6, 2025
கேட்டது ₹37,907 கோடி… கிடைத்தது ₹522.34 கோடி…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
Similar News
News November 3, 2025
தெலங்கானா பஸ் விபத்து.. நெஞ்சை உலுக்கும் போட்டோ!

தெலங்கனாவின் ரங்காரெட்டியில் நிகழ்ந்த <<18183288>>பஸ் விபத்தில்<<>> சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 15 மாத குழந்தையும், அக்குழந்தையின் தாயாரும் உயிரின்றி கிடக்கும் போட்டோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. பஸ் விபத்து நிகழ்ந்த இடத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்க்க முடியாமல், மீட்பு பணியில் ஈடுபடுவோரும் தவித்து வருகின்றனர்.
News November 3, 2025
BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், மாணவியின் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். இளைஞர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News November 3, 2025
₹51 கோடி வழங்கும் BCCI!

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, BCCI ₹51 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இத்துடன் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, ICC ₹39.78 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ICC வழங்கிய கடந்த உலகக் கோப்பை பரிசுத் தொகையை காட்டிலும் இது 239% அதிகமாகும்.


