News April 6, 2025

கேட்டது ₹37,907 கோடி… கிடைத்தது ₹522.34 கோடி…!

image

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

Similar News

News December 24, 2025

இந்துக்களின் உரிமையை CM பறிக்கிறார்: தமிழிசை

image

தினமும் CM ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், இந்துக்களுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களின் உரிமையை CM ஸ்டாலின் பறிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். 13 அமைச்சர்கள் பெயிலில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆன்மிகத்தை எதிர்த்தவர்களின் நிலை இதுதான் என்றும் சாடியுள்ளார்.

News December 24, 2025

பொங்கல் பண்டிகை… நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல, தென் மாவட்டங்களுக்கு மேலும் 40 ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை (அ) நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், கடந்த முறை டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த முறை உஷாரா புக் பண்ணிக்கோங்க நண்பர்களே!

News December 24, 2025

Profit-Sharing முறையில் ‘பாரத் டாக்ஸி’: அமித்ஷா

image

‘பாரத் டாக்ஸி’ சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். Profit-Sharing முறையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் நேரடியாக டிரைவர்களுக்கு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களை காட்டிலும் இதில் கட்டணம் குறைவாக இருக்கும் எனவும், ஜனவரி 1-ல் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!