News April 6, 2025
கேட்டது ₹37,907 கோடி… கிடைத்தது ₹522.34 கோடி…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
Similar News
News December 7, 2025
கடலூர்: மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி மருங்கூர் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டிட்வா புயலின் எதிரொலியால் பெய்து வந்த தொடர் மழையால், மழை நீர் வெளியேற வழி இன்றி வயலில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
News December 7, 2025
வட மாவட்டங்களில் திமுகவின் மாஸ்டர் மூவ்!

விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என பேசி வரும் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு மா.செ., பதவி வழங்கியதன் மூலம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும் என தலைமை நம்புகிறதாம்.
News December 7, 2025
2027 WC-ல் Ro-Ko இடம் பெறுவார்களா? கம்பீர் பதில்

2027 WC-ல் Ro-Ko ஜோடி விளையாடுவார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க BCCI முனைவதாக கூறப்படும் சூழலில், கோச் கம்பீரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2027 WC-க்கு 2 ஆண்டுகள் இருப்பதாக கூறிய அவர், தற்போதைய அணி குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். மேலும், இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதாகவும் கூறினார்.


