News October 23, 2025
ஆசியான் மாநாடு: PM மோடி பங்கேற்கமாட்டார் என தகவல்

அக்.26-ம் தேதி மலேசியாவில் தொடங்கும் ஆசியான் உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆசியான் மாநாட்டில், PM மோடி அதிபர் டிரம்பை சந்தித்து பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், PM மோடி காணொலி மூலம் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 23, 2025
BREAKING: உருவாகிறது புதிய புயல் சின்னம்.. வந்தது அலர்ட்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அடுத்த 48 – 72 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில், தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது.
News October 23, 2025
இப்படி ஒரு பீர் பாட்டிலை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க

பிரபல கார்ல்ஸ்பெர்க் மதுபான நிறுவனம், உலகின் மிகச்சிறிய பீர் பாட்டிலை தயாரித்துள்ளது. வெறும் 12 மி.மீ. உயரமுள்ள இந்த பாட்டிலில் 1 துளி ஆல்கஹால் அல்லாத பீர் மட்டுமே இருக்கிறதாம். பொறுப்புடனும், குறைந்த அளவில் மது குடிப்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்த, இதனை உருவாக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News October 23, 2025
ஆஸி., க்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த Hitman!

ஒருபுறம் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் சொதப்பிய நிலையில், நம்பிக்கை தரும் வகையில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். ODI பார்மெட்டில் ஆஸி., அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்று ரோஹித் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் விராட் கோலி 802 ரன்களுடன் உள்ளார். ரோஹித் 73 ரன்களில் அவுட்டான போதும், இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.