News October 22, 2025

தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்புகள் குறைவு!

image

வங்கக்கடலில் தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இது வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News October 22, 2025

மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட்; எதை குறிக்குது?

image

➤பச்சை: வானிலை பாதுகாப்பாக உள்ளது. அன்றாட நடவடிக்கைகளை தொடரலாம் ➤மஞ்சள்: வானிலை மோசமடைய வாய்ப்பு. மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் ➤ஆரஞ்சு: போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு போன்ற பொதுசேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு ➤ரெட்: மிகவும் அபாயகரமான வானிலை. உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. SHARE IT.

News October 22, 2025

இந்தியா மீதான USA வரி குறைகிறதா?

image

இந்தியா – USA இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதன் படி, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் தற்போதுள்ள 50% இலிருந்து 15–16% ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, USA-ன் சோளம் & சோயா உணவுப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 22, 2025

BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது ரெட் அலர்ட்

image

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!