News April 19, 2024

1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08%, கள்ளக்குறிச்சியில் 44% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடலூர் 37.84%, வேலூர் 39.58%, ஈரோடு 43.54%, ராமநாதபுரம் 40.90% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 32.31% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Similar News

News November 11, 2025

வந்தாச்சு குழந்தைகளுக்கான UPI.. இனி டென்ஷன் இல்ல!

image

குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு தொடங்காமல், UPI பரிவர்த்தனை செய்ய Junio UPI Wallet என்ற திட்டத்தை RBI அறிமுகப்படுத்துகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து குழந்தைகள் அறிய இது உதவும் என நம்பப்படுகிறது. இந்த Wallet பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். ஆகவே செலவு வரம்பு, பரிவர்த்தனை எதற்காக, எத்தனை முறை, எவ்வளவு செலவிடப்படுகிறது போன்றவை பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

News November 11, 2025

நடிகர் அஜித் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

image

சென்னை ECR-ல் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நடிகர் SV சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

News November 11, 2025

டெல்லி ஆபத்தை முன்பே கணித்த பள்ளி மாணவன்

image

பள்ளியை முடித்துவிட்டு செங்கோட்டை மெட்ரோ வழியாக வந்த 12-ம் வகுப்பு மாணவன், அப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான போலீஸ், ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதை கண்டதாக கூறியிருக்கிறார். Reddit தளத்தில் இவர் இதைபற்றி பதிவிட்ட 3 மணி நேரத்தில் அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சிறுவனின் Reddit பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

error: Content is protected !!