News April 11, 2024
களத்தில் இருக்கும் வரை நாங்க தான் கிங்…

ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி, தங்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசு என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன் அணி களத்தில் இருக்கும் வரை போட்டி முடிந்துவிட்டதாக எந்த தருணத்திலும் யாரும் நினைத்துவிட கூடாது. இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வோம் என்பதை அணி வீரர்கள் நிரூபித்துள்ளார்கள் என்ற அவர், அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து வெல்வோம் என்றார்.
Similar News
News July 9, 2025
’ஆந்திராவில் காவி வேஷ்டி, தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி’

பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக பேசிய ரோஜா, ஆந்திரா வந்தால் காவி வேஷ்டி, தமிழ்நாட்டுக்கு சென்றால் பச்சை வேஷ்டி அவர் உடுத்திக் கொள்வதாகவும், திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் அவர் பேசுவதாகவும் தெரிவித்தார்.
News July 9, 2025
3வது டெஸ்டில் பும்ரா களமிறங்குவாரா?

இந்தியா- இங்கி., இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், நாளை தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என்றும், பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கி., முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
அகமதாபாத் விமான விபத்து: முதல் கட்ட அறிக்கை தாக்கல்

அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழுவினர் முதல் கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.