News March 4, 2025

ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

image

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

கரூரில் விபத்து; இளைஞர் பலி…!

image

கரூர்: நாமக்கல் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மனோஜ் (24), தனது பைக்கில் வாங்கல் நாவல் நகர் சாலையில் பயணித்தார். பின்னால் வந்த சந்தோஷ் குமார் ஓட்டிய கார் பைக்கை மோதியதில் மனோஜ் கீழே விழுந்து காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை கந்தசாமி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 10, 2025

டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

image

தனக்கு டைரக்‌ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.

News December 10, 2025

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல்

image

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, EPS தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம்.

error: Content is protected !!