News June 25, 2024
கலைஞரின் கனவு இல்லம் – விண்ணப்பிக்க அழைப்பு

குமரி ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதற்கான சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வீடு வழங்கிட கோரி உடனடியாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.19) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.54 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.82 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.92 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 858 கன அடி, பெருஞ்சாணிக்கு 392 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.


