News December 23, 2024
ரூ.1 லட்சம் தொகையுடன் கலைஞர் பொற்கிழி விருது

சிறந்த படைப்பாளர்களுக்கு கலைஞர் நிதியில் இருந்து ஆண்டுதோறும் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வான எழுத்தாளர்கள் பட்டியலை புக் ஃபேர் நடத்தும் பபாசி அமைப்பு வெளியிட்டுள்ளது. விருது உடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும். *பேரா. அருணன் -உரைநடை *நெல்லை ஜெயந்தா -கவிதை *சுரேஷ்குமார இந்திரஜித் -நாவல் *என்.ஸ்ரீராம் -சிறுகதைகள் *கலைராணி -நாடகம் *நிர்மால்யா -மொழிப்பெயர்ப்பு.
Similar News
News September 10, 2025
சற்றுமுன்: கட்சியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

அமித்ஷாவை சந்தித்து ‘அதிமுக ஒருங்கிணைப்பு’ குறித்து பேசியதாக நேற்று மதியம் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களை நீக்கி இபிஎஸ் அதிரடி காட்டியிருக்கிறார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் மருதமுத்து உள்ளிட்டோரை கட்சியில் இருந்தும், ஏ.வி.எம். செந்தில், செல்வன், அருள் ராமசந்திரன் உள்ளிட்டோர் கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
News September 10, 2025
மூட்டு வலியை விரட்ட செய்யும் எளிய யோகா!

✦மூட்டு வலிகளை குறைத்து, கால் தசைகளுக்கு சுப்த பாதாங்குஸ்தாசனம் வலு சேர்க்கும்.
➥ தரையில் வானம் பார்த்தபடி படுக்கவும்.
➥கைகள் பக்கவாட்டில் நேராக இருக்க, வலது காலின் முட்டியை மடக்காமல் மேலே உயர்த்தவும்.
➥காலை உயர்த்திய நிலையில், வலது கை விரல்களால் காலை தொடவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, இடது காலிலும் செய்யவும். Share it to friends.
News September 10, 2025
வெள்ளை அறிக்கை மட்டும் விளங்கி விடுமா? TRB ராஜா

CM ஸ்டாலினின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று EPS வலியுறுத்தியிருந்தார். இதற்கு, வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா? என்று TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். CM முன்பு பயணித்த நாடுகளுடன் போடப்பட்ட 36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள், உற்பத்தி நிலையை எட்டிவிட்டன என்றும், 11 நிறுவனங்களின் நில எடுப்பு பணிகள் நடப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.