News August 4, 2025
நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் இருப்பதாக போலீஸ் கூறியுள்ளது. அவரை கைது செய்து ஆகஸ்ட் 11-ல் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 4, 2025
CRPF வீரர் வீட்டில் கொள்ளை: அண்ணாமலை கண்டனம்

கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த 22.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதுவரை நகை மீட்கப்படவில்லை என பெண் CRPF வீரர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இதுபற்றி பேசிய அண்ணாமலை, போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காதனாலே வீடியோ பதிவிட வேண்டிய சூழலுக்கு அப்பெண் தள்ளப்பட்டார் என்றார். குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதும், தேசத்தை காக்க கூடியவர்கள் உதவிக்காக கெஞ்சுவதும் தான் திமுக மாடல் அரசு என்றார்.
News August 4, 2025
நீங்க இனிப்பு அதிகம் சாப்பிடுபவரா?

சர்க்கரை அதிகமுள்ள பானங்களை, ஒரு நாளைக்கு 2 முறை (அ) அதற்கு அதிகமாக அருந்துவோரின் சிறுநீரில் புரோட்டீன் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது, சிறுநீரகங்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடியாத நிலையை காட்டுகிறது. ஆகவே சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், அவை தேநீர், காஃபி போன்றவையாக இருந்தாலும், சோடா, கோலா போன்ற கூல் டிரிங்ஸாக இருந்தாலும், குறைவாக அருந்துவது நல்லது. தவிர்ப்பது மிகவும் நல்லது.
News August 4, 2025
BREAKING: தவெக மாநாடு தேதி மாற்றம்

மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற இருந்த தவெக மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. அதனால், போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மதுரை எஸ்.பி. அலுவலகம் சென்ற புஸ்ஸி ஆனந்த், மாநாடு தேதியில் மாற்றம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 – 22-க்குள் ஏதேனும் ஒரு தேதியில் மாநாடு நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.