News April 5, 2024
லாலு பிரசாத் யாதவுக்கு பிடி வாரண்ட்

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு க்வாலியர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கிற்கு தேர்தல் நேரத்தில் பிடி வாரண்ட் வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் ஆண்டு லாலு முதல்வராக இருந்தபோது ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தற்போது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
CSK vs SRH மேட்சுக்கு டிக்கெட் வாங்க ரெடியா?

சேப்பாக்கம் மைதானத்தில் CSK, SRH அணிகள் மோதும் போட்டி ஏப். 25-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது போட்டி இதுவாகும். இதிலாவது CSK வெல்லுமா?
News April 21, 2025
பல்கலை. வேந்தராக கவர்னரே நீடிப்பார்: பரபரப்பு அறிக்கை

பல்கலை.களின் வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. உதகையில் ஏப். 25, 26-ல் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கவர்னரை கண்டித்த உச்சநீதிமன்றம், முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலக காய் நகர்த்தும் விசிக?

திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது, TN அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா?