News July 4, 2024
இடைத்தேர்தலுக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் கைது?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீதான ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும், இதையடுத்து சிறப்பு குழு ஒன்றை அரசு அமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு 7 அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை வேகமெடுக்கும், அதன்பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேரும் வரிசையாக கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 22, 2025
திங்கள்கிழமையில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமா?

திங்கள்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. லீவ் முடிந்து திங்கள்கிழமை வேலைக்கு போகும்போது நமக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்குமாம். இது மாரடைப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும், வார இறுதியில் அதிகமாக மது அருந்துவதால் HighBP ஏற்பட்டு இதய செயலிழப்புக்கு வழிவகுக்குமாம். இதிலிருந்து தப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ள <<17790792>>க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.
News September 22, 2025
கிஸ் vs சக்தித் திருமகன்: பாக்ஸ் ஆபிசில் முந்தியது யார்?

செப்டம்பர் 19-ம் தேதி பல படங்கள் வெளியான போதிலும், ‘கிஸ்’ & ‘சக்தித் திருமகன்’ ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. 3 நாள் முடிவில், ‘கிஸ்’ படம் ₹1.76 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், ‘சக்தித் திருமகன்’ ₹3.79 கோடியை வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News September 22, 2025
RECIPE: சுவையான கேழ்வரகு வடை!

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு நல்லது. இதில் வடை செய்தால், அனைவரும் ரசித்து உண்பார்கள் *கேழ்வரகு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும் *இதனை பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான, ஹெல்தியான கேழ்வரகு வடை ரெடி. இப்பதிவை நண்பர்களுக்கும் பகிருங்கள்.