News September 15, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤இலங்கை: 2025 பிப்ரவரியில் தனியார் பயன்பாட்டிற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இலங்கை அரசு முடிவு. ➤காங்கோ: ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு காங்கோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ➤ஈரான்: ISRC ஏவிய சம்ரான்-1 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ➤பாக்: தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கனுக்கான பாக். தூதரை திரும்ப அழைத்து அந்நாடு உத்தரவிட்டது.
Similar News
News December 28, 2025
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளை(டிச.29) உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை 6 முதல் 8 மணி வரை வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது?
News December 28, 2025
மேனேஜரை அதிரடியாக நீக்கிய விஷால்

தனது மேனேஜரும், விஷால் மக்கள் நல இயக்கத்தில் செயலாளருமான ஹரிகிருஷ்ணனை பதவியில் இருந்து நீக்கி நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, தேவி சமூக அறக்கட்டளை மற்றும் விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் எந்த விதத்திலும் ஹரிகிருஷ்ணன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர் அல்ல. எனவே எந்தவொரு விஷயத்திலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
கிராமப்புற வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்: EPS

அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு தையூரில் பரப்புரை செய்த அவர் அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். இளைஞர்களின் செல்வாக்கை இழந்ததால் மீண்டும் லேப்டாப் திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


