News March 14, 2025
இன்று முதல் ஆரோக்யா பால் லிட்டருக்கு ₹4 உயர்வு

ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ₹4ம், தயிர் விலை ₹3ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76ல் இருந்து ₹80ஆகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், பால், மோர் பாக்கெட் அளவுகளில் 125 ML, 120 ML ஆகவும், 180 ML, 160 ML ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Similar News
News March 15, 2025
ராசி பலன்கள் (15.03.2025)

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – பிரீதி ➤கன்னி – போட்டி ➤துலாம் – மேன்மை ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – பயம் ➤மகரம் – நலம் ➤கும்பம் – அன்பு ➤மீனம் – கவலை.
News March 15, 2025
மிஸ் பண்ண கூடாத சூப்பர் வாய்ப்பு: டிரம்ப்

உக்ரைன் போரை நிறுத்த நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாகவும், ரஷ்ய வீரர்களால் சூழப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேற்று புடினைச் சந்தித்து பேசிய நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
IPL: மஞ்சள் படைக்கு மாநகர பஸ்களில் ஃப்ரீ…!

சேப்பாக்கத்தில் IPLபோட்டிகள் நடைபெறும்போது, போட்டியை காணச் செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை வைத்து, போட்டி தொடங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு மட்டுமே பேருந்துகளில் (NON AC) பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.