News April 23, 2025
தீவிரவாதிகளின் தளபதியை சுற்றிவளைத்த ராணுவம்

J&K-வில் எண்கவுண்டர் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட TRF தீவிரவாத அமைப்பின் தளபதி ஆஷிஃப் ஃபவுஜி உள்பட அனைத்து தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆஷிஃப் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 17, 2025
அலர்ட்: புயல் வரப்போகும் தேதி இதுதான்

நவ.22-ல் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து, நவ.25-ல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடலோர & டெல்டா மாவட்டங்களில் நவ.21, 22 ஆகிய நாள்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.
News November 17, 2025
முதல் ஆஸ்கார் விருதை பெற்றார் டாம் க்ரூஸ்

ஹாலிவுட்டின் நடிப்பு அரக்கன் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆஸ்கர் குறிப்பிட்ட படத்தில் அவர் நடித்ததற்காக வழங்கப்படவில்லை என்பதே இதில் ஹைலைட். மாறாக, திரைப்பட துறையில் அவர் படைத்த சாதனை, அவர் ஆற்றிய சேவை ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விருதை அவர் எமோஷனலாக பெற்றுக்கொண்டார்.
News November 17, 2025
இன்னும் 3 நாள்களில் புதிய கட்சி: மல்லை சத்யா

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவ.20-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கும் தலைவராக வைகோ இருந்தார் என்றும் சாடினார். மேலும், 2016 தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் உள்ளதாக கூறிய அவர், அதை தற்போது சொல்ல முடியாது என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.


