News April 28, 2025
9 தீவிரவாதிகளின் வீடுகள் ராணுவத்தால் தகர்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 9 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் வீடுகளை ராணுவம் வெடிகுண்டு வைத்தும், பொக்லைன் வைத்தும் தகர்த்து வருகிறது. நேற்று தீவிரவாதிகள் அமீர் நஷிர், ஷாஃபி, ஜமீல் அகமது ஆகியோரின் வீடுகளை ராணுவம் இடித்து தள்ளியது. அதேபோல் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையும் நடக்கிறது.
Similar News
News April 28, 2025
செந்தில் பாலாஜி வழக்கு முடித்து வைப்பு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி எந்த பதவியும் வகிக்கக்கூடாது என ED கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமின் வழக்கை முடித்து வைத்தது. SC தெளிவாக கூறிவிட்டதால், அவரின் கட்சிப் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
News April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு கூடுதல் கட்டுப்பாடு தேவை: ED

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இதில், செந்தில் பாலாஜி மீதான ஜாமின் நிபந்தனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் மீண்டும் அமைச்சராகக் கூடாது, எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்றும் ED வலியுறுத்தியுள்ளது.
News April 28, 2025
நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சென்சார் கட்டுப்பாடு இல்லாததால், OTT-ல் வெளிவரும் பல தொடர்கள், படங்களில் ஆபாசக்காட்சிகள் அதிகமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்த மனு மீதான விசாரணையில், விளக்கம் அளிக்க அமேசான், நெட்பிளிக்ஸ், உள்ளிட்ட OTT தளங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணையின் போது இந்த தளங்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.