News April 15, 2025
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி திடீர் நீக்கம்

பகுஜன் சமாஜ் (BSP) மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தைக் கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையில் பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் சமாஜ் ராஜாராம் அறிவித்துள்ளார். மாநிலத் தலைவர் ஆனந்தன் மீது அண்மையில் பொற்கொடி புகார் கூறியிருந்தார்.
Similar News
News November 4, 2025
BIG NEWS: அதிமுக எம்எல்ஏ ராஜினாமா.. பெரும் அதிர்ச்சி

<<18194000>>திமுகவில் இணைந்த<<>> OPS ஆதரவு, ஆலங்குளம் அதிமுக எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தற்போது பாஜகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். திராவிட கொள்கையை உண்மையாக பின்பற்றக்கூடியது திமுக என்பதால் தான் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
IMPORTANT: இத பண்ணலனா பான் கார்டு வேலை செய்யாது!

டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம் என UIDAI அறிவித்துள்ளது. இணைக்காவிட்டால் வரும்  ஜனவரி 1, 2026 முதல், பான் கார்டு வேலை செய்யாது என எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், புதிதாக பான் கார்டு வாங்குபவர்களுக்கு ஆதார் தானாகவே இணைக்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதாரை பான் கார்டுடன் இணைக்க, <
News November 4, 2025
கோவை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை உறுதி: CM

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனித தன்மையற்றது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூர குற்றச்செயல்களை கண்டிக்க எந்த கடுஞ்சொல்லும் போதாது என்று கூறியுள்ள அவர், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத்தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


