News August 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
₹500 கோடி இல்லனா படம் ஃப்ளாப் தான்!

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் படம் பெரிய விலைக்கு விற்பனையாகி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ₹500 கோடியை கடந்தால் மட்டும் ஹிட் ஸ்டேட்டஸை அடைய முடியும். இதில் தமிழ்நாட்டில் ₹225 கோடியையும், வெளிநாடுகளில் ₹215 கோடியையும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இவ்வளோ பெரிய வசூலை அள்ளி, வெற்றி படமாக அமையுமா ‘ஜனநாயகன்’?
News December 3, 2025
இண்டியா கூட்டணியில் இருந்து விலகலா?

பிஹார் சீட் ஷேரிங்கில் நடந்த பிரச்னையால் IND கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த JMM நிர்வாகி குணால் சாரங், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால்தான் பாஜக புரளிகளை கிளப்பிவிடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் JMM எப்போதும் பாஜகவுக்கு அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.


