News August 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.
News December 3, 2025
11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்துக்கு பதில் கிடைக்குமா?

2014-ல் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்ற MH370 விமானம் மாயமானது. அதில் பயணித்தவர்களின் நிலையும் தெரியாததால், தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் விமானம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் 2017-ல் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், விமானத்தை மீண்டும் தேட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. டிச.30-ல் தொடங்கும் இப்பணி, 55 நாள்களுக்கு நடக்கவுள்ளது.
News December 3, 2025
ஒரே இடத்தில் புயல் சின்னம்… பேய் மழை வெளுத்து வாங்கும்

இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.


