News August 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தவெகவை வேரிலேயே கிள்ளி எறியணும்: வினோஜ் பி.செல்வம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எப்படியெல்லாம் வளர்ச்சியை தடுத்ததோ, அப்படி இப்போது தவெக செயல்படுவதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்யை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நக்சல்களின் மனநிலையில் தவெக என்ற கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை (தவெக) வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை உறுதியுடன் கட்டாயம் செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.
News September 18, 2025
கவினை ஆணவக்கொலையை குடும்பமே திட்டமிட்டது: CB-CID

கவின் ஆணவக்கொலையில் காதலியின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக கோர்ட்டில் CB-CID தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கவினை சுர்ஜித் கொலை செய்தது தனது பெற்றோருக்கு தெரியாது என பெண் கூறியிருந்தார். ஆனால் தற்போது, சுபாஷினியின் காதல் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்பதால் கவினை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக CB-CID கூறியதால், பெண்ணின் தந்தை SI சரவணனின் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது.
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் TTV, OPS.. இபிஎஸ் சம்மதம்

அமித்ஷா – EPS சந்திப்பு குறித்து புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! NDA கூட்டணியில் மட்டும் TTV, OPS, சசிகலாவை சேர்க்க EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாவட்டங்களில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷா கூறியதை அடுத்து, EPS ஓகே சொல்லி இருக்கிறாராம். இதனால், பாஜக தேசிய தலைமை மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.