News August 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
6, 6, 6, 4, 4, 4, 4… மிரட்டல் அடி

வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களமிறங்கிய இந்திய அணியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது அதிரடியால் கரை சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தர், 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களை விளாசினார். இதில், அவர் ஒரே ஓவரில் 4,6,6 விளாசி, ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். சுந்தரின் மிரட்டலான ஆட்டத்தை யாரெல்லாம் லைவ்வாக பார்த்தீங்க?
News November 2, 2025
ஃபேஷனில் கலக்கும் பைசன் ரஜிஷா விஜயன்

கர்ணன், ஜெய் பீம், சர்தார், பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன், தனது துல்லியமான உணர்ச்சி மிகுந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அழகு மற்றும் திறமை இணைந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய போட்டோக்கள் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 2, 2025
கரூர் துயரம்.. விஜய் சிக்குகிறாரா?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிப்புரத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் விசாரித்த அதிகாரிகளின் அடுத்த குறி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம். நாளை அங்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் விஜய்யும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை விஜய் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.


