News September 24, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு CBI-க்கு மாற்றம்

BSP கட்சியின் மறைந்த முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றி சென்னை HC உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை CBCID விசாரித்து வந்த நிலையில், கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் CBCID உடனடியாக ஆவணங்களை CBI-யிடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
தமிழ் சினிமா இயக்குநர் காலமானார்.. நேரில் அஞ்சலி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த <<17811560>>இயக்குநர் நாராயண மூர்த்தியின்<<>> உடல் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள அவரது மகன் யோகேஷ்வரன் சென்னை திரும்பியதும், நாளை மறுநாள் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாராயண மூர்த்தி உடலுக்கு ‘மனதை திருடிவிட்டாய்’ படக்குழு, ‘நந்தினி’, ‘அன்பே வா’ சீரியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். #RIP
News September 24, 2025
தமிழக அரசில் 881 வேலைவாய்ப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 881 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 24, 2025
மொரீஷியஸிலும் அன்புமணி போட்டியிடுவார்: ராமதாஸ்

பை பையாக பொய்யை வைத்துக்கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். தாங்கள் தான் பாமக என கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதாக அன்புமணியை அவர் கடுமையாக சாடினார். பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும் என தெரிவித்த ராமதாஸ், தென்கொரியா, ஜப்பான், மொரீஷியஸிலும் மாம்பழ சின்னத்தில் அவர்கள் போட்டியிடவுள்ளதாக கூறினார்.