News August 7, 2025
ஆம்ஸ்டராங் வழக்கு: குண்டர் சட்டம் 17 பேருக்கு ரத்து

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு அதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்களில் 17 பேர் தங்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி HC-ல் மனு அளித்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இதே காரணம் கொண்டு அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றார்.
Similar News
News August 7, 2025
₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News August 7, 2025
இந்தியாவிற்கு வரும் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில், PM மோடியுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அவர் நேரில் ஆலோசனை செய்வார். NSA தலைவர் அஜித் தோவல் இதை தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புடினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
News August 7, 2025
5 மாதத்தில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள்: ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் 2024 மே மாதம் லோக் சபா தேர்தலும், நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. லோக் சபாவில் வென்ற காங்., கூட்டணி, சட்டசபையில் தோல்வியடைந்தது. இதுபற்றி பேசிய ராகுல், இரு தேர்தலுகளுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் அதிகமான வாக்குப்பதிவுகள் நடந்ததுமே இத்தோல்விக்கு காரணமென்றார்.