News March 16, 2024

அரியலூர்: மகனால் தம்பதியினர் தற்கொலை!

image

அரியலூர்‌ நகரில் சடைய படையாட்சி தெருவை சேர்ந்தவர்‌ ராமசாமி, வளர்மதி தம்பதியினர். இவர்களின் மகன் இளமதி இவர் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தாய் ,தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்து போன தம்பதியினர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை நேற்று குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

அரியலூர்: நூலகத்தினை ஆய்வு செய்த எம்எல்ஏ

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட திறக்கப்பட்ட கிளை நூலக கட்டிடத்தினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதில் பயின்று வரும் மாணவ மாணவிகளிடம் நூலகம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். இதில் நூலக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் மாணவர்கள் வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News November 6, 2025

அரியலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

அரியலூர்: கல்வி உதவிதொகை வேண்டுமா?

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவிதொகை திட்டத்தில், OBC, EBC, DNT பிரிவை சேர்ந்த பட்டியலிடப்பட்ட (டாப் கிளாஸ் ஸ்கூல்ஸ்) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை Scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!