News April 5, 2025
பசங்களிடம் ரொம்ப கண்டிப்பா இருக்கீங்களா? ப்ளீஸ் நோட்

பெற்றோர்கள் வளர்க்கும் விதம், குழந்தைகளின் ஆயுட்காலத்தை எப்படி பாதிக்கிறது என ELSA அமைப்பு ஆய்வு செய்தது. அதில், மிகக் கட்டுப்பாட்டுடன் வளரும் ஆண் குழந்தைகள் 80 வயதிற்கு முன் இறப்பதற்கு 12% அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுவே, பெண் குழந்தைகளுக்கு 22% வாய்ப்பு அதிகமாம். குழந்தைகளுக்கு கவனிப்பும், கண்டிப்பும் தேவைதான். ஆனால், அது வெளியில் சொல்ல முடியாத மன அழுத்தத்தைக் கொடுக்கும் அளவில் இருக்கக் கூடாது.
Similar News
News November 9, 2025
மழைக்காலத்திற்கு அவசியமான கசாயம்!

சுக்கு மல்லி கசாயம் சளி, இருமலை குறைத்து, செரிமானத்தை கூட்டி, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ★தேவையானவை: சுக்கு, மல்லி, சீரகம் ★செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, அதை ஆறவைத்து, வடிகட்டி தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை 2 வேளை பருகலாம். SHARE IT.
News November 9, 2025
6-வது வாரமாக முடங்கி கிடக்கும் அமெரிக்க அரசு

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியதாக பெருமிதம் தெரிவிக்கும் டிரம்ப், சொந்த நாட்டு பிரச்னையை தீர்க்காமல், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை தவிக்க விட்டுள்ளார். அமெரிக்காவில் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான மானியங்களை நீட்டிக்கும் விவகாரம் தொடர்பாக டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சி இடையே நீடிக்கும் மோதலால், அரசாங்கத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், 6-வது வாரமாக அமெரிக்க அரசு முடங்கியுள்ளது.
News November 9, 2025
நாட்டின் கணினி அறிவியல் ‘பிதாமகன்’ காலமானார்

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.


