News March 3, 2025

ஆபீஸில் ஒரு குட்டி தூக்கம் போடுறீங்களா..?

image

மதிய நேரத்தில் பல ஊழியர்களும் ஆபீஸில் குட்டி தூக்கம் போடுவார்கள். ஆச்சர்யமாக, இது நல்ல விஷயம் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தூங்காதவர்களை விட பெரும்பாலும் பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குமாம். மேலும், அவர்களுக்கு படைப்பாற்றல் அதிகரிப்பது, செயல்திறன் மேம்படுவது போன்ற அலுவலகத்திற்கு தேவையான சில நல்ல விசயங்களும் நடக்கின்றன. உங்க ஆபீஸில் தூங்க விட்டுருவாங்களா..?

Similar News

News December 5, 2025

அனில் அம்பானியின் ₹10,000 கோடி முடக்கம்

image

வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ₹1,120 கோடி சொத்துக்களை ED இன்று முடக்கியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் ₹8,997 கோடியை முடக்கிய நிலையில், இன்றுடன் சேர்த்து ₹10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து <<17314173>>அனில் அம்பானி<<>> மீது பிடியை இறுக்கி வரும் ED, நிதிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

News December 5, 2025

விண்வெளி to அணு உலை வரை: இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

image

இந்தியா – ரஷ்யா இடையே பல துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2030-க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை $100 பில்லியனாக (₹8.99 லட்சம் கோடி) உயர்த்துவது, விண்வெளி, பாதுகாப்பு, டெக்னாலஜி துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அணு உலைகளை மேம்படுத்துவது, விசா நடைமுறைகளை எளிதாக்குவது, தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News December 5, 2025

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி

image

டிச.9-ல் புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை, CM ரங்கசாமியிடம் இருந்து புஸ்ஸி ஆனந்த் நேரடியாக பெற்றுள்ளார். இதன்படி, உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கரூர் துயருக்கு பிறகு, விஜய் பங்கேற்கும் பொதுவெளி அரசியல் நிகழ்வு இது என்பதால், அரசியல் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!