News March 3, 2025
ஆபீஸில் ஒரு குட்டி தூக்கம் போடுறீங்களா..?

மதிய நேரத்தில் பல ஊழியர்களும் ஆபீஸில் குட்டி தூக்கம் போடுவார்கள். ஆச்சர்யமாக, இது நல்ல விஷயம் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தூங்காதவர்களை விட பெரும்பாலும் பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குமாம். மேலும், அவர்களுக்கு படைப்பாற்றல் அதிகரிப்பது, செயல்திறன் மேம்படுவது போன்ற அலுவலகத்திற்கு தேவையான சில நல்ல விசயங்களும் நடக்கின்றன. உங்க ஆபீஸில் தூங்க விட்டுருவாங்களா..?
Similar News
News August 19, 2025
1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 19, 2025
4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, நீலகிரி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 24-ம் தேதி வரையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.