News April 14, 2025

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவரா? குட் நியூஸ் இதோ..

image

மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு RBI சூப்பர் பரிசு கொடுத்துள்ளது. RBI-யின் புதிய விதிகளின்படி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை சரியான நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கி ஆண்டுக்கு 8% வட்டியை அவர்களுக்கு செலுத்த வேண்டும். இந்த விதி அக்டோபர் 1, 2008-க்குப் பிறகு தாமதமான அனைத்து ஓய்வூதிய வழக்குகளுக்கும் பொருந்தும்.

Similar News

News April 16, 2025

10 நிமிடத்தில் வீட்டிற்கே வரும் சிம் கார்டு

image

சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்காக, டெலிவரி பார்ட்னராக பிளிங்கிட்டை ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம் டெலிவரி சேவை, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் கிடைக்கும். சிம் கார்டு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின்படி, ஆதார் அடிப்படையிலான KYC அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எண்ணை செயல்படுத்தலாம்.

News April 16, 2025

காலை 7 மணி வரை மழை

image

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

வரலாற்றில் இன்றைய தினம்

image

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)

error: Content is protected !!