News June 15, 2024
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவரா நீங்கள்?

3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என எண் கணித நிபுணர்கள் கூறுகின்றனர். பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 3 உள்ளவர்கள் மனதளவில் மிகவும் கூர்மையானவர்களாவும், கடினமான சூழ்நிலைகளை கூட தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்பவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கின்றனர். சுயமரியாதை கொண்ட இவர்கள், மற்றவர்களின் வேலையில் தலையிட மாட்டார்கள் என்கிறார்கள்.
Similar News
News November 13, 2025
உலக சந்தையில் ‘Made in India’ உரக்க ஒலிக்கும்: PM

மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ₹25,060 கோடிக்கான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்திற்கு (EPM) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள PM மோடி, இந்த ஒப்புதல் மூலம் உலக சந்தையில் ‘Made in India’ உரக்க ஒலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஏற்றுமதியின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளின் சதி: USA

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா சிறப்பாக விசாரணை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய சதித்திட்டம் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்த அவர், விசாரணையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.


