News March 17, 2025
சாவை பார்த்து பயமா.. எனக்கா..? மோடி தெறி பதில்

‘பாட் காஸ்ட்’ நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், ‘மரணத்தை நினைத்து நீங்கள் என்றாவது பயந்தது உண்டா?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி, நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயமாகி விட்டதாகவும், நிச்சயமாக நடக்கப் போகும் ஒரு விஷயத்தை பற்றி எதற்கு பயப்பட வேண்டும்? என்றும் வினவினார். அதனால், மரண பயத்தை புறந்தள்ளி வாழ்க்கையை நேசிக்க வேண்டும் எனக் கூறினார்.
Similar News
News March 18, 2025
தினம் ஒரு ஜூஸ்… எப்போதும் ஃபிரஷ்

*பச்சை காய்கறி சாறு உடலுக்கு வலிமை தருவதுடன், புற்றுநோய் அபாயத்தை தடுக்கும்.
*மாதுளம் பழச்சாறு ரத்த சோகையை நீக்குவதுடன், உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்.
*நெல்லிக்காய் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தைத் தூண்டும்.
*பன்னீர் திராட்சை ஜூஸ் உடலில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
*பிளம் ஜூஸ் வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.
News March 18, 2025
இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 18) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News March 18, 2025
67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE), லஷ்கர்-இ-தொய்பா, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காகவும் மேற்கண்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.