News June 13, 2024
ஸ்மார்ட்ஃபோனை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்?

தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் மத்தியிலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட்ஃபோன் திரையை மணிக்கணக்கில் பார்ப்பதால், கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவது மனநலனிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
Similar News
News September 6, 2025
ஸ்பான்சர்ஷிப் விலையை நிர்ணயித்த BCCI

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா அமலான நிலையில், Dream 11 உள்ளிட்ட ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தை BCCI முறித்தது. இதனையடுத்து, புதிய ஸ்பான்சர்ஷிப்களை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், Bilateral போட்டிகளுக்கு ₹3.5 கோடி, ICC, ACC உள்ளிட்ட போட்டிகளுக்கு ₹1.5 கோடி என ஸ்பான்சர்ஷிப் இருப்பு விலையை BCCI நிர்ணயித்துள்ளது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடர் செப்.9-ல் தொடங்குகிறது.
News September 6, 2025
சோனியா காந்தி மீது வழக்கு பதிய கோரி மனு

காங்.,ன் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தேசிய அளவில் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், 1983-ல் இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியின் பெயர், 1980-லேயே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, சோனியா காந்தி மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதன் மீதான விசாரணை, செப்.10-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
அஜித் படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு

அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜா இசையில் வெளியான பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ₹5 கோடி இழப்பீடு கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாடல் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் பதிலளித்தது. இந்நிலையில், HC-ல் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உரிமையாளர் யார் என்றும் அவர் கேட்டுள்ளார்.