News May 15, 2024

வாகனம் ஓட்டும்போது ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்?

image

வாகனங்களை ஓட்டும்போது செய்யக்கூடிய அபாயகரமான விஷயங்களில் ஒன்று ஃபோன் பயன்படுத்துவது. அதிலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே மெசேஜ் செய்வது மனநோயாளியின் நடத்தையுடன் தொடர்புடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள 1,000 ஓட்டுநர்களிடம் நடத்திய ஆய்வில், சுமார் 600 பேர் வாகனம் ஓட்டும்போது ஃபோனை பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News September 18, 2025

கல்கி 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் இல்லை

image

பேன் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி போன்ற படங்களில் நடிக்க முழு ஒத்துழைப்பு தேவை எனவும் நன்கு பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், x தளத்தில் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கெனவே பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் விலகியிருந்தார்.

News September 18, 2025

நேபாள சூழலை இந்தியாவில் உருவாக்க ராகுல் முயற்சி: பாஜக

image

ராகுல் காந்தி சுமத்தும் <<17748314>>வாக்கு திருட்டு <<>>குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அனுராக் தாக்குர் கூறியுள்ளார். ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதன் மூலம் வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமையை இந்தியாவிலும் ராகுல் உருவாக்க முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி எதிரொலியாக விரக்தியில் பேசும் ராகுல், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

நேபாளத்துக்கு இந்தியா உதவும்: PM மோடி

image

நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கியுடன், PM மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, சமீபத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, நேபாளத்தில் மீண்டும் அமைதி திரும்புவதற்கும், நிலைத்தன்மை உண்டாவதற்கும் தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளார். முன்னதாக, SM-களுக்கு தடை, ஊழலுக்கு எதிர்ப்பு ஆகியவற்றிற்காக Gen Z தலைமுறையினர் போராட்டம் நடத்தினர்.

error: Content is protected !!