News October 23, 2024
தனிமையை விரும்புபவரா நீங்கள்!

கொடுமையில் மிகவும் கொடுமையானது தனிமையில் இருப்பது. அதுவும் இன்றைய இயந்திர வாழ்க்கையில், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலர் தனிமையால் அவதியடைவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வறுமை, மகிழ்ச்சியற்ற சமூக உறவுகளுடன் வாழ்பவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கு 30% அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியாவால், ஒரு நபரின் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
Similar News
News August 12, 2025
விடிய, விடிய மகிழ்ச்சியில் இருந்தேன்: ராமதாஸ்

‘வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு’ மகத்தான வெற்றி பெற்றதை நினைத்து விடிய, விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது அறிக்கையில், பெண் கல்வி, மது ஒழிப்பு குறித்து தான் பேசும்போது பெண்கள் அளித்த கைத்தட்டல்கள் ஆள்வோரின் செவிப்பறையில் மோதியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மகளிரை முழுமையாக போற்றி, கொண்டாடிய விழா இதுவெனவும் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
அன்புமணியின் புது ஸ்கெட்ச்: ஒர்க் அவுட் ஆகுமா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுமென பாமகவினரை அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், கடந்தாண்டு எவ்வாறு மதுவிலக்கு வேண்டி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினோமோ அதைப்போன்று இந்தாண்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 12, 2025
டெல்லியில் இருந்து நற்செய்தி வருகிறது: அண்ணாமலை

தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அண்மையில் TN விவசாயிகள் டெல்லியில் PM மோடியை சந்தித்து பேசியிருந்தனர். அத்திக்கடவு – அவிநாசி 2-ம் கட்ட திட்டம் (அ) விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.