News April 24, 2024
அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்துவோரா நீங்கள்?

காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும், பட்ஸ் பயன்படுத்துவதால் காதுகளின் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு பாதிப்புக்குள்ளானால் உணவின் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படலாம்.
Similar News
News January 3, 2026
வரிவிதிப்பால் அமெரிக்கா செழிக்கிறது: டிரம்ப்

வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை கண்டிராத அளவில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் வரிவிதிப்பு பயனளித்துள்ளதாக அவர் SM-ல் குறிப்பிட்டுள்ளார். தங்களது நாட்டை நியாயமற்ற முறையில் நடத்திய இதர நாடுகளுக்கு வரிவிதிக்கும் திறனை இழந்திருந்தால், அமெரிக்காவுக்கு பயங்கரமான இழப்புக்கு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 3, 2026
T20 WC: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 WC-க்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் போஸ்ச், பிரேவிஸ், டி காக், டி ஜோர்ஜி, டோனோவன், யான்சென், லிண்டே, கேஷவ் மகாராஜ், மபாகா, மில்லர், இங்கிடி, நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். அதிரடி வீரர்கள் ரிக்கல்டன், ஸ்டப்ஸ் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. 2024 WC ஃபைனலில் இந்தியாவிடம் நூலிழையில் தோற்ற SA, இம்முறை சாம்பியனாகும் முனைப்பில் உள்ளது.
News January 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 569
▶குறள்:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
▶பொருள்: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்


