News December 30, 2024

AIDSஆல் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேரா?

image

எய்ட்ஸ் முதன்முதலாக கடந்த 1983ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகநாடுகளுக்கு பரவி, மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், உலகம் முழுவதும் இதுவரை 4.20 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். தரவுகளின் படி, 2023ல் 3.99 கோடி பேர் AIDSல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

Similar News

News July 11, 2025

மல்லை சத்யா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

image

மல்லை சத்யா, துரை வைகோ இடையே இருந்த மோதல் தற்போது வைகோ, மல்லை சத்யா இடையேயான மோதலாக மாறியுள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என வைகோ பேசியுள்ளார். இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது எனவும், அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ள மல்லை சத்யா, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News July 11, 2025

‘டம்மி வாய்ஸ்’ ஆக EPS இருக்க அவசியமில்லை: நயினார்

image

பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் போல பேசிய இபிஎஸ், தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கிவிட்டார் என CM ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ ஆக இபிஎஸ் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், என்ன கருத்தை பேச வேண்டுமோ அதைத்தான் அவர் பேசுவதாக தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நாள் முதல் CM ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டதாக கூறினார்.

News July 11, 2025

அறநிலையத்துறை கல்லூரிகள்: EPS விளக்கம்

image

கோயிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என அண்மையில் இபிஎஸ் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் பேசிய இபிஎஸ், அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறை தான் அனைத்துக்கும் நிதி ஒதுக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் நலன் கருதியே அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர தான் சொன்னதாக விளக்கமளித்தார்.

error: Content is protected !!