News February 24, 2025
இந்தியாவில் இத்தனை அதிசயங்களா?

உலகளவில் எந்தெந்த நாடுகளில் அதிகளவு UNESCO கலாசார தளங்கள் இருக்கிறதென்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், முதலிடத்தில் 60 தளங்களுடன் இத்தாலி உள்ளது. 43 தளங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அவற்றில், தாஜ் மகால், அஜந்தா குகைகள் ஆகியவையும் அடங்கும். தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மகாபலிபுரம், நீலகிரி மலை ரயில் ஆகியவை இப்பட்டியலில் உள்ளன.
Similar News
News February 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 188
▶குறள்:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
▶பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.
News February 24, 2025
அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா

நடிகையாக தனது கலை வாழ்வை தொடங்கி தமிழக மக்களின் ‘அம்மா’வாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவர், எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளையும் தாண்டி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினார். 6 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்த அதிமுக, 4 முறை வெற்றிபெற்றது. குறிப்பாக 2011, 2016இல் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது அவரின் தலைமைக்கு கிடைத்த சான்றாகும்.
News February 24, 2025
கேரளாவில் காட்டு யானை தாக்குதலில் 2 பேர் பலி

கேரளாவில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர். வனப்பகுதியில் தம்பதியரான வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிருந்தபோது யானை தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். யானை தாக்குல் தொடர்ந்து நடக்கும் நிலையில், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.