News October 3, 2025
மூலிகை தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஃப்ரெஷ்ஷாக மூலிகை தேநீரை அருந்தினால், 50- 90% சத்து கிடைப்பதுடன், இந்த நன்மைகளும் போனசாக கிடைக்கும்: உடலுக்கு உடனடி உற்சாகத்தை அளிப்பதுடன், ஆற்றலை அதிகரிக்கும் ◆உடலில் நச்சுகளை நீக்கி தூய்மைப்படுத்தும் ◆உடலின் செயல்திறனை மேம்படுத்தும் ◆மனதுக்கு அமைதி, சாந்தம் கிடைக்கும் ◆ஜீரண மண்டல செயல்பாடுகளை எளிதாக்கும் ◆தூக்கமின்மை பிரச்சினையைக் குறைக்கும் ◆நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும். SHARE.
Similar News
News October 3, 2025
மீண்டும் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 சட்ட அமலாக்க அதிகாரிகள் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் வாகனம் சென்ற பாதையில் திட்டமிடப்பட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த செப்., 30-ம் தேதி குவெட்டாவில் நடந்த <<17875660>>வெடிகுண்டு விபத்தில்<<>> 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
News October 3, 2025
தமிழ்நாட்டில் eSIM சேவையை அறிமுகம் செய்த BSNL

BSNL வாடிக்கையாளர்களுக்கு eSIM வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது. டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவை வழங்கப்படுகிறது. நீங்கள் QR கோடை ஸ்கேன் செய்து உங்களது மொபைல் போனில் லிங்க் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 2G தொடங்கி 4G வரை இந்த eSIM-ஐ பயனர்கள் உபயோகிக்கலாம். இந்த சேவை முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.
News October 3, 2025
ராமநாதபுரம் இனி தண்ணீர் இல்லா காடு இல்லை: CM

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் ₹176 கோடி மதிப்பிலான திட்டங்களை CM ஸ்டாலினை தொடங்கி வைத்தார். ராமநாதபுரத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது திமுக அரசுதான் என தெரிவித்த அவர், ராமநாதபுரத்தை இனி தண்ணீர் இல்லாத காடு என சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும் CM ஸ்டாலின் பேசினார்.