News August 8, 2024
மகளிர் உதவித்தொகைக்கு மட்டும் நிதி இருக்கா?

நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தர நிதி இல்லை, மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு நிதி இருக்கிறதா என மஹாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் நிலத்தில் பாதுகாப்பு துறை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு உரிய பதில் தாக்கல் செய்யாவிட்டால், தலைமைச் செயலரை வரவழைக்க நேரிடும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.
Similar News
News November 26, 2025
செங்கோட்டையன் முன் இருக்கும் 3 வாய்ப்புகள்!

MLA பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையனுக்கு தற்போது 3 வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.1. விஜய் கட்சியில் இணைவது. 2. திமுகவின் அழைப்பை ஏற்று அங்கு செல்வது(நீண்ட காலமாக அதிமுகவில் பயணித்துவிட்டு திமுகவுக்கு சென்றால் எதிர்மறையான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தலாம்) 3. தனியாக கட்சி தொடங்குவது. இதில், முதல் வாய்ப்பையே அவர் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News November 26, 2025
BREAKING: தமிழ்நாட்டிற்கு ‘ரெட் அலர்ட்’

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(நவ.26) கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை(நவ.27) தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.


