News March 18, 2025
வீட்டில் குழந்தைகள் இருக்கா? அப்போது இது முக்கியம்..

கேரளாவில் 3 வயது சிறுமி டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்டை பயன்படுத்தி <<15791111>>உயிரிழந்தாள்<<>>. அதுபோல் பிளீச்சிங் தூள், சோப்பு தூள் போன்றவையும் கூட குழந்தைகளுக்கு எமனாக மாறலாம் என்பதால் அதை குழந்தைகளின் கைக்கு எட்டாத இடங்களில் வைப்பது அவசியம். அதேபோல் கத்தி, கத்தரிக்கோல், சிறிய நட்டுகள், பட்டன்கள், சில்லரை காயின்கள் போன்றவையும் அவர்களின் பார்வைக்கு படும்படி வைக்கக்கூடாது. Share it…
Similar News
News March 18, 2025
இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 18) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News March 18, 2025
67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE), லஷ்கர்-இ-தொய்பா, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காகவும் மேற்கண்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
ரத்தத்தை சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ்…

*பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
*இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகலாம்.
*தர்ப்பைப் புல் கஷாயம் குடிக்கலாம்.
*அத்திப்பழம் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியடைந்து உடல் பலம் பெரும்.
*வெந்தயம், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை அடிக்கடி சாப்பிடலாம்.
*கீரை, முட்டை, சுண்டைக்காய், கிவி பழம், முழு தானியம் வெல்லம், ஈரல் ஆகியவை ரத்த சோகையை தடுத்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.