News January 23, 2025
ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டதா? கவலை வேண்டாம்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும், கடைகள் மற்றும் பேருந்துகளில் சில்லரை வாங்கும்போதும் சில நேரம் நமக்கே தெரியாமல் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் வந்துவிடுவதுண்டு. அந்த நோட்டுக்களை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என தெரியாமல் பலர் இருப்பர். ஆனால் இந்த கவலை தேவையில்லை எனவும், இந்தியாவில் உள்ள எந்த வங்கி கிளையிலும் அதை கொடுத்து வேறு புதிய நோட்டை வாங்கி கொள்ளலாம் என்றும் RBI தெரிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
போராட்டத்திற்கு தயாராக வேண்டும்: வைகோ

திருச்சியில் நேற்று மதிமுக மாநாடு நடைபெற்றது. அதில், *கீழடி ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். *GST வரி சீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும். *30 நாள்கள் சிறையில் இருந்தால் MP, CM பதவி பறிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும். *மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு எதிராக போராட்டத்திற்கு தயாராக வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
News September 16, 2025
செவ்வாய்க்கிழமையும் சக்தி வாய்ந்த முருகன் வழிபாடும்!

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை வாரி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள். இன்றே தொடங்குங்கள். SHARE IT.
News September 16, 2025
BREAKING: நீக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

TTV, OPS-க்கு ஆதரவாக செயல்பட்டால், அதிமுகவில் இருந்து உடனே நீக்குவது EPS வழக்கம். இதற்கிடையில் செங்கோட்டையனுடன் பேசி வருவதாக OPS கூறியிருந்தார். இந்நிலையில், சிலபேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம்; அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று EPS சூளுரைத்துள்ளார். இதனால், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.