News December 5, 2024

இன்னும் போன்பூத்கள் பயன்பாட்டில் இருக்கிறதா?

image

கடைசியாக எப்போது டெலிபோன் பூத்தை பார்த்தீங்க. கடந்த 3 வருடத்தில் 44,922 டெலிபோன் பூத்கள் மூடப்பட்டுவிட்டது. தற்போது 17,000 பூத்கள் பயன்பாட்டில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் கூறினார். தமிழகத்தில் நகரங்களில் 2,809 PCOக்களும், கிராமங்களில் 305 PCOக்களும் இருக்கிறதாம். நீங்க கடைசியா போன் பூத்’ல பேசுனா விஷயம் நியாபகம் இருக்கா?

Similar News

News December 5, 2025

பரமக்குடி மாணவி சாதனை

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் பளு தூக்கும் போட்டியில் 123 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் போட்டிக்கு தேர்வாகி முதல் இடம் பிடித்துள்ளார். இதில் சுபாந்தினி, தேஜா மற்றும் ஸ்ரீநிதி ஆகிய மாணவிகள் வெங்கல பதக்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு வருகின்றனர்.

News December 5, 2025

BREAKING: அரசு வாபஸ் பெற்றது.. புதிய அறிவிப்பு

image

விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமானி வாரத்திற்கு 2 நாள்கள் ஓய்வு பெறலாம், ஒரு இரவில் 2 விமானத்தை மட்டுமே விமானி தரையிறக்க வேண்டும் போன்ற விதிகளை DGCA அண்மையில் அமல்படுத்தியது. தற்போதைய புதிய அறிவிப்பால், விமான இயக்கத்தில் உள்ள பிரச்னைகள் தீரும் என கூறப்படுகிறது.

News December 5, 2025

இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்னை? என்ன நடக்கிறது?

image

மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும்போது. இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்சனையாக இருக்கிறது? DGCA-வால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட, விமானிகளுக்கு கூடுதலாக ஓய்வு நேரம் என்ற விதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக DGCA 6-18 மாதம் கால அவகாசமும் வழங்கியது. இருப்பினும், இண்டிகோ கூடுதலாக ஒரு விமானியை கூட பணியமர்த்தவில்லை. இதுவே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!