News December 5, 2024

இன்னும் போன்பூத்கள் பயன்பாட்டில் இருக்கிறதா?

image

கடைசியாக எப்போது டெலிபோன் பூத்தை பார்த்தீங்க. கடந்த 3 வருடத்தில் 44,922 டெலிபோன் பூத்கள் மூடப்பட்டுவிட்டது. தற்போது 17,000 பூத்கள் பயன்பாட்டில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் கூறினார். தமிழகத்தில் நகரங்களில் 2,809 PCOக்களும், கிராமங்களில் 305 PCOக்களும் இருக்கிறதாம். நீங்க கடைசியா போன் பூத்’ல பேசுனா விஷயம் நியாபகம் இருக்கா?

Similar News

News December 6, 2025

ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

image

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும். ➤சாமந்திப்பூ இதழ்களை பிரித்து நன்கு காய வைக்கவும். ➤1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும். ➤8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ➤அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE THIS.

News December 6, 2025

சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

image

டிட்வா புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பின், புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததால், நேற்று சற்று மழை குறைந்தது. இந்நிலையில், கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது.

News December 6, 2025

திமுக – பாஜக இடையே மறைமுக உறவு: ஜெயக்குமார்

image

அதிமுக யாருடைய காலிலும் விழவில்லை, திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார். திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு மறைமுக உறவு இருப்பதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கான முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும் என தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அதிமுக மூத்த தலைவர் இப்படி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!