News May 16, 2024
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News October 26, 2025
பிக் பாஸ் Wild Card Entry இவரா? கம்ருதீனுக்கு செக்!

பிக் பாஸ் சீசன் 9-ல் Wild Card மூலம் 4 போட்டியாளர்கள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மகாநதி சீரியலில் கம்ருதீனுக்கு மனைவியாக நடித்த திவ்யா இந்த வாரம் முதலில் எண்ட்ரீ கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும், கம்ருதீனுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக கூறப்படும் நிலையில், இவர் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எண்ணி பிக் பாஸ் குழு இவரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாம்.
News October 26, 2025
தலையணையில் இப்படி ஒரு ஆபத்தா?

தலையணை இருந்தால் மட்டும்தான் இங்கு பலருக்கும் தூக்கம். தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என தலையணை வைத்து தூங்குபவர்கள் பலர். ஆனால், Amerisleep பவுண்டேஷனின் ஆய்வில், தலையணை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி துவைக்காத, அழுக்குப் படிந்த தலையணை உறைகளில், டாய்லெட் சீட்டில் உள்ளதைவிட 17,000% கிருமிகள் உள்ளதாம். இதனால் சரும பிரச்னைகள் உள்பட பல பாதிப்புகள் ஏற்படுமாம்.
News October 26, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

மொன்தா புயல் உருவாவதால், புதுவையின் ஏனாமில் நாளை முதல் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், <<18102668>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்.30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


