News May 16, 2024
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரியில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி, ஓசூர், குருபரப்பள்ளி, ஜூஜூவாடி, பேகப்பள்ளி, ஊத்தங்கரை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மேலும் எந்தஎந்த பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என்பதை <
News December 6, 2025
தவெகவில் இணைந்தவுடன்.. விஜய் போட்ட உத்தரவு

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார், திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.
News December 6, 2025
இண்டிகோ மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர்

இண்டிகோ பிரச்னை விரைவில் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். விமான பணி நேர வரம்பு விதிகளால்தான் இந்த இன்னல்கள் நேர்ந்ததாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மற்ற விமான நிறுவனங்கள் சரியாகத்தானே இயங்குகிறது என கூறியுள்ளார். மேலும் இதற்கு இண்டிகோ தான் காரணம் என்ற அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.


