News May 16, 2024
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
ஸ்மிருதி மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரம் எங்கே?

திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஸ்மிருதி மந்தனா, தனது இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு பேசுபொருளாகியுள்ளது. தனது விளம்பர வீடியோவை பகிர்ந்த அவர், அதில் நிச்சயதார்த்த மோதிரம் அணியாதது பதிவாகியுள்ளது. இதையடுத்து ‘திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது உண்மைதானா?’ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, தனது திருமணம் சார்ந்த அனைத்து போட்டோக்களையும் <<18381176>>ஸ்மிருதி<<>> தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கியிருந்தார்.
News December 5, 2025
சினிமா பிரபலம் காலமானார்.. கமல் உருக்கமுடன் ஆறுதல்

தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் தயாரிப்பாளரான <<18468825>>AVM சரவணன்<<>> பூவுலகை விட்டு மறைந்துவிட்டார். வெளியூர் பயணம் காரணமாக, அவரது இறுதிச் சடங்கில் கமல் பங்கேற்காத நிலையில், உருக்கமுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சரவணன் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். AVM புரொடக்சன் தயாரிப்பில் சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கமல் நடித்துள்ளார்.
News December 5, 2025
புடின் முன்னிலையில் PAK-க்கு செய்தி சொன்ன PM மோடி

ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பாகிஸ்தானுக்கு PM மோடி கூர்மையான செய்தியை அனுப்பியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்படுவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் குரோகஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதம் தான் முழு காரணம், அதற்கு எதிராக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.


