News May 16, 2024
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
பாலைய்யா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

இன்று வெளியாகவிருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2 தாண்டவம்’ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், இது தங்களுக்கு மிகவும் கடினமான தருணம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் பாலைய்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக தொழில்நுட்ப பிரச்னையால் ‘அகண்டா 2’ பிரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 5, கார்த்திகை 19 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12.15 AM – 1:15 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News December 5, 2025
இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த கேலக்ஸி!

பரந்து விரிந்த வான்வெளியில் உள்ள ரகசியங்கள் ஏராளம். அந்தவகையில், இந்திய விஞ்ஞானிகள் Milkyway கேலக்ஸியை போலவே ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்ந்து, 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் இது உருவாகியுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு, இந்திய நதியான Alaknanda-வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


