News April 30, 2025
ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News November 23, 2025
சென்னை: ரயிலில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து சென்னைக்கு இன்று(நவ.22) அதிகாலை வந்த விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் குழந்தையை கண்டெடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, பின்னர் அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 23, 2025
கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.
News November 23, 2025
விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.


