News April 30, 2025
ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News December 18, 2025
தேர்தல் அறிக்கை.. திமுகவுக்கு உள்ள சவால்கள்

2021 தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறிய திமுக, தற்போது அதை மறுப்பதால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நீட் ரத்து, சிலிண்டருக்கு ₹100 மானியம், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு, கல்விக்கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளும் கிடப்பில் உள்ளன. எனவே, <<18592144>>திமுகவின் 2026 தேர்தல் அறிக்கையை<<>> தயாரிக்கும் குழுவுக்கு பல சவால்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 18, 2025
விஜய் பரப்புரை.. முதல் அதிர்ச்சி சம்பவம்

விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இளைஞருக்கு திடீரென்று உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்ததால், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தவெகவினர், அவரை மீட்டு போலீஸ் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர்.
News December 18, 2025
இந்திய-வங்கதேச உறவு பாதிக்கப்படாது: ஷேக் ஹசீனா

வங்கதேச<<18539019>>பொதுத்தேர்தலில்<<>>, அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்திருப்பது, ஜனாநாயகத்தை கேலியாக்குவது போன்றது என அக்கட்சி தலைவர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்காது என குற்றஞ்சாட்டிய அவர், தடை செய்தாலும் கட்சியை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். வரலாறு, கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட <<18591819>>இந்திய-வங்கதேச உறவு<<>> சிலரின் இடைபட்ட செயல்பாட்டால் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


