News April 3, 2024

ஏப்ரல் 3: வரலாற்றில் இன்று

image

1505 – இலங்கையில் முதல் முறையாக போர்ச்சுகீசியர்கள் வந்திறங்கினர்.
1933 – ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 – ஜப்பான் படையினர் அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் படை மீது தாக்குதல் நடத்தினர்.
1948 – தென் கொரியாவில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
1958 – ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சி ராணுவம் அவானா மீது தாக்குதல் நடத்தியது.

Similar News

News August 12, 2025

ரொனால்டோ அணிவித்த மோதிரத்தின் விலை தெரியுமா?

image

உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் <<17376793>>ரொனால்டோவுக்கும் <<>>அவரது நீண்ட நாள் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஓவல் வடிவத்தில் வெட்டப்பட்டுள்ள 25- 30 கேரட் வைர மோதிரத்தின் போட்டோவை ஜார்ஜினா வெளியிட்டுள்ளார். இந்த மோதிரத்தின் விலை சுமார் ₹16.8 கோடி முதல் ₹42 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது உலகின் அதிக விலை கொண்ட மோதிரங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

News August 12, 2025

பெண் அரசியல் தலைவர் சுஜாதா காலமானார்

image

திருச்சி EX மேயரும், காங்., பெண் தலைவர்களில் ஒருவருமான சுஜாதா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2022-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக்க வேண்டும் என ஸ்டாலினை நேரடியாக சந்தித்து ப.சி., வலியுறுத்தும் அளவுக்கு திருச்சி முகமாக இருந்தவர்.

News August 12, 2025

ஆசிரியர் தகுதித்தேர்வு தேதியை மாற்ற EPS வலியுறுத்தல்

image

கல்லறைத் திருநாளன்று <<17372693>>ஆசிரியர் தகுதித் தேர்வு <<>>நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரை போலவே மக்கள் உணர்வுகளை அறியாமல் அலட்சியமாக திமுக அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!