News April 28, 2025
ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.
Similar News
News December 7, 2025
திருமணத்தை நிறுத்திய ஸ்மிருதி மந்தனா!

தனது திருமணம் நின்றுவிட்டதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தை தான் இத்துடன் முடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார், அனைவரும் அவ்வாறே நடந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இனி இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் மேலும் பல கோப்பைகளை வெல்ல நினைப்பதாக பதிவிட்டுள்ள அவர், இனி அதிலேயே தனது கவனம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.
News December 7, 2025
சரித்திரம் படைத்தார் அபிஷேக் சர்மா!

ஒரே ஆண்டில் T20-ல் 100 சிக்ஸர்களை கடந்த ஒரே இந்தியர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில், சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி இச்சாதனை படைத்துள்ளார். 2025-ல் T20 கிரிக்கெட்டில், தற்போது வரை அவர் 101 சிக்சர்களை அடித்துள்ளார். இப்போட்டியில் முதலில் பஞ்சாப் 233/6 ரன்களை குவிக்க, சர்வீசஸ் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


