News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.
Similar News
News November 24, 2025
BREAKING: நாகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
BREAKING: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
PM மோடி நாடு திரும்புகிறார்

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற PM மோடி இன்று நாடு திரும்புகிறார். இது குறித்து அவர் தனது X பதிவில், உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இதில் பல நாட்டு தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 2 நாள்கள் நடைபெற்ற <<18364418>>ஜி20 மாநாட்டில்<<>> ஆக்கிரமிப்பு, பொருளாதரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


