News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.
Similar News
News November 25, 2025
நடிகை பாலியல் வன்கொடுமை.. 8-ம் தேதி தீர்ப்பு

மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. திலீப் உள்ளிட்ட 9 பேருக்கு எதிரான இந்த வன்கொடுமை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவுள்ளது.
News November 25, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. முடிவை தெரிவித்தார்

2026-ல் தேமுதிகவுக்கு<<18372669>> ராஜ்யசபா சீட்<<>> வழங்கப்படுவதாக அதிமுக அறிவித்திருந்தது. ஆனாலும், அதிமுகவிற்கு தேமுதிக பிடிகொடுக்காமலேயே இருந்தது. இந்நிலையில், ராஜ்ய சபா சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பேசியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது?
News November 25, 2025
தமிழ்த்தாய் பாடல் இல்லாமல் அரசு நிகழ்ச்சி: அண்ணாமலை

CM தலைமையில் நடைபெற்ற செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலேயே நிகழ்ச்சி தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுவதாக திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண் என அண்ணாமலை சாடியுள்ளார். உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.


